உள்ளூர் செய்திகள்

நாளை தாம்பரம், அம்பத்தூர் பகுதிகளில் மின்தடை

Published On 2023-03-01 07:15 GMT   |   Update On 2023-03-01 07:15 GMT
  • சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
  • நாளை மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

சென்னை:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இணை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், அம்பத்தூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். நாளை மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தாம்பரம் பகுதியில் மாடம்பாக்கம் அகரம் மெயின் ரோடு, மப்பேடு சந்திப்பு, செயலக காலனி, வெங்கடமங்களம் மெயின் ரோடு, திருமால் நகர் பல்லாவரம் கண்ணபிரான் தெரு, கோவலன் தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, நடேஷன் சாலை, பல்லாவரம் கிழக்கு ஒரு பகுதி பம்மல் அண்ணா சாலை, மா.பொ.சி தெரு, அப்துல்கலாம் ரோடு மற்றும் முத்துபழனியப்பா நகர்.

அம்பத்தூர் பகுதியில் என்.என்.எஸ், எச்.ஐ.ஜி, எம்.ஐ.ஜி, சின்ன நொளம்பூர், பொன்னியம்மன் நகர், முகப்பேர் மேற்கு பிளாக், மோகன்ராம் நகர், ரெட்டி பாளையம் பகுதி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் இதில் அடங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News