உள்ளூர் செய்திகள்

பொம்மிடி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2023-05-01 08:13 GMT   |   Update On 2023-05-01 08:13 GMT
  • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

பாப்பிரெட்டிப்பட்டி,

தருமபுரி மாவட்டம், பொம்மிடி, வே.முத்தம்பட்டி, கே.என்.புதூர் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பொம்மிடி, அஜ்ஜம்பட்டி, பி.பள்ளிப்பட்டி, வாசிக்கவுண்டனூர், பொ.துரிஞ்சிபட்டி, நடூர், ஒட்டுபட்டி, பில்பருத்தி, கேத்துரெட்டிப்பட்டி, வேப்பிலைப்பட்டி, வே.முத்தம்பட்டி, கே.மோரூர், கண்ணப்பாடி, கே.என்.புதூர், வத்தல்மலை, கொண்டர அள்ளி, ரேகடஅள்ளி, திப்பிரெட்டிஅள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை கடத்தூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News