உள்ளூர் செய்திகள்

நாளை மின்நிறுத்தம்

Published On 2022-08-01 09:46 GMT   |   Update On 2022-08-01 09:46 GMT
  • மேற்கண்ட தகவலை சாலியமங்கலம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நல்லையன் தெரிவித்துள்ளார்.
  • பூண்டி மற்றும் ராகவமாள்புரம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சை அருகே உள்ள பூண்டி மற்றும் ராகவமாள்புரம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

எனவே பூண்டி, சாலியமங்கலம், திருபுவனம், மலையர் நத்தம், குடிகாடு, செண்பகபுரம், பள்ளியூர், களஞ்சேரி, இரும்பு தலை, ரங்கநாதபுரம், சூழியகோட்டை, கம்பர் நத்தம், அருந்தவப்புரம், வாளமார்கோட்டை, ஆர்சுத்திப்பட்டு, அருமலைக்கோட்டை, சின்னபுலிக்காடு, நார்த்தேவன் குடிகாடு, அரசப்பட்டு, வடக்கு நத்தம், மூத்திமம்மாள்புரம், பனையக்கோட்டை, சடையார் கோவில், துறையுண்டார்கோட்டை ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

மேற்கண்ட தகவலை சாலியமங்கலம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நல்லையன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News