உள்ளூர் செய்திகள்
கோத்தகிரியில் சக்தி மலை முருகன் கோவிலில் பிரதோஷ வழிபாடு
- சக்திமலை முருகன் கோவிலில் அமைந்துள்ள சிவன் கோவிலில் மார்கழி மாத பிரதோஷ பூஜை நடைபெற்றது.
- நந்தி தேவருக்கும் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
அரவேணு,
கோத்தகிரி சக்திமலை முருகன் கோவிலில் அமைந்துள்ள சிவன் கோவிலில் மார்கழி மாத பிரதோஷ பூஜை நடைபெற்றது. இதனையொட்டி சிவனுக்குப் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்து அபிஷேக பூஜையும், தீபாராதனையும் நடந்தது. நந்தி தேவருக்கும் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த மார்கழி மாத பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.