உள்ளூர் செய்திகள் (District)

நாமகிரிபேட்டையில் தொடக்க பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-08-02 09:15 GMT   |   Update On 2022-08-02 09:15 GMT
  • வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நாமகிரிப்பேட்டை வட்டார கல்வி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

ராசிபுரம்:

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமகிரிப்பேட்டை ஒன்றிய கிளையின் சார்பில் நாமகிரிப்பேட்டை வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் ஒன்றிய தலைவர் சிதம்பரம் தலைமை தாங்கினார். மாநில சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் பழனிசாமி, ஒன்றிய செயலாளர் மோகன் குமார் முன்னிலை வகித்தனர்.

நாமக்கல் மாவட்ட மகளிர் அணி செயலாளர் பாரதி, மாவட்ட துணை செயலாளர் லதா, வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் ஜெகநாதன், புதுச்சத்திரம் ஒன்றிய செயலாளர் கதிரேசன், நாமகிரிப்பேட்டை ஒன்றிய துணைத் தலைவர்கள் வினோத், கிருஷ்ணன், இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ் உள்பட 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நாமகிரிப்பேட்டை வட்டார கல்வி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Tags:    

Similar News