உள்ளூர் செய்திகள் (District)
வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் மனு
- 4-வது வார்டு பகுதியில் குடியிருக்கும் தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மனு அளித்தனர்.
- வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு 4-வது வார்டு பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள், தாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை.
எனவே 4-வது வார்டு பகுதியில் குடியிருக்கும் தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மதுரா செந்திலிடம் மனு அளித்தனர்.
மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
அப்போது பரமத்தி ஒன்றிய செயலாளர் தனராசு, பொத்தனூர் பேரூர் செயலாளரும்,பேரூராட்சி தலைவருமான கருணாநிதி, பேரூராட்சி துணைத் தலைவர் அன்பரசு, வார்டு கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், நிர்வாகிகள் உடனிருந்தனர்.