உள்ளூர் செய்திகள்

கடையம் அருகே காலிகுடங்களுடன் வந்து பொதுமக்கள் மனு

Published On 2023-09-02 07:11 GMT   |   Update On 2023-09-02 07:11 GMT
  • ஐந்தாம்கட்டளை ஊராட்சி சொக்கநாதன் பட்டியில் போதிய குடிநீர் வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
  • இப்பகுதியில் போர் மூலம் ஏற்றப்படும் குடிநீர் தொட்டி மூலம் இப்பகுதிகளுக்கு சுழற்சி முறையில் குடிநீர் விநியோகம் செய்தால் பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை குறைய வாய்ப்புள்ளது.

கடையம்:

கடையம் ஊராட்சி ஒன்றியம் ஐந்தாம்கட்டளை ஊராட்சி சொக்கநாதன் பட்டியில் போதிய குடிநீர் வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இப்பகுதியில் உள்ள ஆற்று நீர் குடிநீர் தொட்டி மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் மக்களின் பயன்பாட்டிற்கு போதுமானதாக இல்லை. எனவே இப்பகுதியில் போர் மூலம் ஏற்றப்படும் குடிநீர் தொட்டி மூலம் இப்பகுதிகளுக்கு சுழற்சி முறையில் குடிநீர் விநியோகம் செய்தால் பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை குறைய வாய்ப்புள்ளது. மேலும் சொக்கநாதன் பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளியில் கழிவறைகள் வசதிகள் உள்ளன . தற்போது தண்ணீர் பற்றாக்குறையினால், கழிவறைகளில் பயன்படுத்துவதற்கு கூட தண்ணீர் இல்லாமல் பள்ளி குழந்தைகளும் ஆசிரியர்களும் சிரமப்பட்டு வருகின்றனர் என இப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். இது குறித்து கடையம் வட்டார வளர்ச்சி கிராம ஊராட்சி அலுவலரிடம் அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வந்து மனு அளித்தனர்.

Tags:    

Similar News