உள்ளூர் செய்திகள்

மது அருந்திய தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு

Published On 2023-01-17 05:18 GMT   |   Update On 2023-01-17 05:18 GMT
  • டாஸ்மாக் பாரில் தகராறு
  • 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை காமராஜபுரத்தை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 33). இவருக்கும், புதுக்கோட்டையை சேர்ந்த குணா என்ற குணசேகரனுக்கும் (25). டாஸ்மாக் கடையில் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து குணா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து அரிவாளால் வெட்டியதில் காயமடைந்த சசிகுமார் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறுத்து குணா உட்பட அவரது நண்பர்கள் 5 பேர் மீது புதுக்கோட்டை நகர போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News