உள்ளூர் செய்திகள்

2 பேர் குண்டர் சட்டத்தில் சிறை

Published On 2022-10-09 06:28 GMT   |   Update On 2022-10-09 06:28 GMT
  • 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறை பாய்ந்தது
  • போக்சோ வழக்கில் கைதானவர்கள்


புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 33), இவர் கடந்த மாதம் 6-ந் தேதி 1 கிலோ 100 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திரு ந்தபோது, அறந்தாங்கி காவல்த்துறையினரால் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இதே போல் கீரனூர் அருகே குளத்தூர் தாலுகா நெடுதாம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 38), இவர் 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கீரனூர் அனைத்து மகளிர் போலீசாரால் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.

இவர்கள் இருவரையும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே பரிந்துரையின் பெயரில், மாவட்ட கலெக்டர் கவிதாராமு உத்தரவின் பெயரில் இவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்களை காவல்த்துறையினர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News