புதுக்கோட்டையில் ஓடும் பேருந்தில் ரூ.37 ஆயிரம், 6 கிராம் தங்கம் அபேஸ்
- புதுக்கோட்டையில் ஓடும் பேருந்தில் ரூ.37 ஆயிரம், 6 கிராம் தங்கம் திருட்டு போனது
- இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அய்யப்பன் வயல் பகுதியை சேர்ந்த முருகேஷன் என்பவரின் மனைவி சுப்புலட்சுமி (வயது 38). அட்சய திருதியை முன்னிட்டு புதுக்கோட்டை கடைவீதிக்கு சென்றுள்ளார். இதற்காக 37 ஆயிரம் ரூபாய் பணம், 6 கிராம் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை ஒரு பையில் வைத்துக்கொண்டு கீரனூரில் இருந்து புதுக்கோட்டை செல்லும் அரசு பேருந்தில் ஏறி உள்ளார். பையை தனது அருகில் வைத்து விட்டு பயணம் செய்துள்ளார்.
புதுக்கோட்டை வந்ததும் பேருந்தை விட்டு இறங்குவதற்காக தனது பையை எடுக்க நினைத்த போது, அது காணாமல் போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக நகர காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் சரவணம், பணம், தங்கம், வெள்ளி பொருட்களுடன் பையை திருடி சென்ற மர்ம ஆசாமி குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.