உள்ளூர் செய்திகள்

பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

Published On 2023-06-05 06:10 GMT   |   Update On 2023-06-05 06:10 GMT
  • பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • அவர்களிடமிருந்து சூதாட்ட அட்டைகள், ரூ.600 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை:

அன்னவாசல் அருகே சித்தன்னவாசல் பகுதிகளில் பொது இடத்தில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடுவதாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தமாறன் உள்ளிட்ட போலீசார் சித்தன்னவாசல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த சித்தன்னவாசல் பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 45), பழனி (26), செல்வம் (26), கார்த்திகேயன் (30), அன்னவாசல் மேட்டுத்தெருவை சேர்ந்த முருகேசன் (42), தச்சம்பட்டியை சேர்ந்த பாஸ்கர் (45) ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சூதாட்ட அட்டைகள், ரூ.600 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News