உள்ளூர் செய்திகள்

ஆலங்குடி அருகே உருட்டு கட்டையால் தாக்கி வாலிபர் படுகாயம்

Published On 2023-02-12 09:40 GMT   |   Update On 2023-02-12 09:40 GMT
  • ஆலங்குடி அருகே உருட்டு கட்டையால் தாக்கி வாலிபர் படுகாயம் அடைந்தார்
  • ராஜமாணிக்கம் தலைமறைவானதால் போலீசார் தேடி வருகின்றனர்.

ஆலங்குடி:

ஆலங்குடி அருகே உள்ள கலிபுல்லா நகரைச்சேர்ந்தவர் செபஸ்தியான் மகன் அந்தோணிசாமி (வயது 44). கலிபுல்லா நகர் ஏ.டி. காலனியை சேர்ந்தவர் கணேசன் மகன்களான புஷ்பராஜ் (48), ராஜமாணிக்கம் ஆகிய இருவரும் அந்தோணிசாமி வீட்டின் அருகில் உள்ள ஆர்எஸ்பதி மரத்தை இருவரும் சேர்ந்து வெட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்தோணிசாமி ஏன் மரத்தை வெட்டுகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு புஷ்பராஜ் மற்றும் ராஜமாணிக்கம் உருட்டு கட்டையால் அந்தோணிசாமியை தாக்கியுள்ளனர். மேலும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்தோணிசாமியை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். இதுகுறித்து அந்தோணிசாமி ஆலங்குடி போலீசாரிடம் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நதியா வழக்கு பதிவு செய்து புஷ்பராஜை கைது செய்தனர். பின்னர் ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்ப்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இதில் ராஜமாணிக்கம் தலைமறைவானதால் போலீசார் தேடி வருகின்றனர்.


Tags:    

Similar News