உள்ளூர் செய்திகள் (District)

விவசாய மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்

Published On 2022-07-18 07:03 GMT   |   Update On 2022-07-18 09:08 GMT
  • விவசாய மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.
  • காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது

புதுக்கோட்டை:

ஆலங்குடி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நாளை (செவ்வாய்கிழமை) ஆலங்குடி கோட்டத்திற்குட்பட்ட விவசாய மின் நுகர்வோருக்கான குறைதீர்க்கும் முகாம் ஆலங்குடி தபால் நிலைம் அருகில் உள்ள உதவி செயற்பொறியாளர் ஆலங்குடி அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த முகாமில் இப்பகுதியை சேர்ந்த அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு. தங்களுக்குரிய பிரச்சனைகளை கூறி அவற்றை நிறைவு செய்து கொள்ளலாம். இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்தி தங்களது குறைகளை நேரில் பகிர்ந்து கொள்ள கேட்டு க்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News