உள்ளூர் செய்திகள்
கடலில் மீன்பிடிக்க சென்ற முதியவர் சாவு
- கடலில் மீன்பிடிக்க சென்ற முதியவர் பலியானார்
- இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
மணமேல்குடியை அடுத்த பத்தகாடு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 65). இவர் நேற்று அதிகாலை அம்மாபட்டிணம் கடற்கரை கிராமத்திலிருந்து கடலில் மீன் பிடிக்க சென்றார். இவர் கைவீச்சு வலையை பயன்படுத்தி மீன் பிடித்துக்கொண்டு இருந்தார். அப்போது அவர் கடலில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அவரது உடல் மணமேல்குடி கோடியக்கரையில் மிதப்பதாக வந்த தகவலின் பேரில் மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.