உள்ளூர் செய்திகள் (District)

புற்றடி மகாசக்தி மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா

Published On 2023-04-03 07:54 GMT   |   Update On 2023-04-03 07:54 GMT
  • ஓம்சக்தி கோஷத்துடன் தீக்குண்டத்தில் இறங்கிய பக்தர்கள்
  • 10 அடி வரை அலகு குத்தி ஏராளமான பக்தர்கள் ஊர்வலம்

ஆலங்குடி,

ஆலங்குடி அருகே திருவரங்குளம் பாரதியார் நகரில் உள்ள புற்றடி மகாசக்தி மாரியம்மன் கோயில் 21ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு அழகு குத்தி, பறவைக் காவடி, பால்குடம் எடுத்து, தீ மிதித்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஊர்வலமாக ஆட்டம் பாட்டத்துடன் கோவிலுக்கு வந்து நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.இந்நிலையில் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தீமிதி திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு திருவரங்குளம் குளக்கரையில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பறவைக் காவடி, பால்குடம் மற்றும் 3 அடியில் இருந்து 10 அடி வரை அலகு குத்தி ஊர்வலமாக வந்தனர். ஓம் சக்தி, பராசக்தி கோஷத்துடன் பக்தர்கள் ஆடிப்பாடி வந்த ஊர்வலமானது கோவிலை வந்தடைந்தது. இதனை தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் பக்தர்கள் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர்.

Tags:    

Similar News