உள்ளூர் செய்திகள்

மருத்துவர் சமூக நல சங்கத்தினர் மனு

Published On 2023-03-16 05:43 GMT   |   Update On 2023-03-16 05:43 GMT
  • முடி திருத்துவோர் நல சங்கம் மாவட்ட தலைவர் கிரு ஷ்ணமூர்த்தி தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
  • கோவில் முடி எடுக்கும் தொழிலாளர்களையும் தவில் இசை கலைஞ ர்களையும் அரசு ஊழியர்களாக நியமிக்க வலியுறுத்தல்

ஆலங்குடி,

ஆலங்குடியில் மருத்துவர் சமூக நல சங்கத்தினர் மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாத னிட ம் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினரும் அமைச் சருமான சிவ.வீ.மெய்யநாதனிடம் தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடி திருத்துவோர் நல சங்கம் மாவட்ட தலைவர் கிரு ஷ்ணமூர்த்தி தலைமையில் மனு அளிக்கப்பட்டது.

கோரிக்கைகளான....எங்கள்சமூகத்தை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வகுப்பி ல் சேர்க்க வேண்டும். ஆந்திர பிரதேச அரசு வழங்கி உள்ளது போல் நமது அரசும் பிசிஆர் ஆக்ட் வழங்க வேண்டும்.

கோவில் முடி எடுக்கும் தொழிலாளர்களையும் தவில் இசை கலைஞ ர்களையும் அரசு ஊழியர்களாக நியமிக்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அப்போது மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் ஆலங்குடி நகர நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் இணைந்து மனு அளித்தனர்.

Tags:    

Similar News