இலவச இருதய பரிசோதனை மருத்துவ முகாம்
- இலவச இருதய பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது
- நகர போக்குவரத்து காவல்துறை சார்பில் நடந்து
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை நகர போக்குவரத்து காவல்துறை சார்பில் இலவச இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கீதா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நகர போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் மரிய சாத்தோ திலகராஜ் அனைவரையும் வரவேற்றார்.
முகாமில் இருதய நல சிறப்பு மருத்துவர் டாக்டர் விஜய் சேகர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். அனைவருக்கும் ரத்தஅழுத்தம், ரத்தத்தில் சர்க்கரைஅளவு, கொழுப்பு அளவு, இருதய சுருள் படம், இருதய ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனை எடுக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்ட சிறு இருதய குறைபாடு உள்ளவர்களுக்கு டாக்டர் விஜய் சேகர் ஆலோசனை வழங்கினார் . 25 நபர்களுக்கு மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப் பட்டனர்.
மருத்துவர்.சுதந்திரகுமார், மார்க்கெட்டிங் தனவேந்தன், இந்திய மருத்துவச் சங்க பொருளாளர் டாக்டர் கோபாலகிருஷ்ணன், போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் மரிய சாத்தோ திலகராஜ், போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர்கள் புவனேஸ்வரன், ரவிச்சந்திரன், ஸ்ரீதர் ,போக்குவரத்து கா வலர்கள் ராஜசேகர், உத்தமி, சற்குணன், விஜய், தே ன்மொழி, கார்த்திக் மற்றும் ஊர்காவ ல்படையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் தமிழ்நாடு காவல்துறை பணியாளர்கள், காவலர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என அனைத்து வகையான மக்களும் முகாமில் 250 க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர்.