உள்ளூர் செய்திகள் (District)

இலவச மருத்துவ முகாம்

Published On 2023-03-14 06:34 GMT   |   Update On 2023-03-14 06:34 GMT
  • முதியோர் மற்றும் மகளி ருக்கான வலி மற்றும் வாத சிகிச்சைக்கான இலவச மூலிகை பிசி யோதெரபி மருத்துவ முகாம்
  • 200க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்

ஆலங்குடி,

ஆலங்குடியில் பிசியோதெரபி மையத்தில் முதியோர் - மகளிருக்கான வலி மற்றும் வாத சிகிச்சைக்கான இலவச மூலிகை பிசியோதெரபி மருத்துவ முகாம் நடைபெற்றது.விழாவில் இயன்முறை மருத்துவர் கோவிந்தசாமி வரவேற்றார். மருத்துவ முகாமிற்கு வாசகர் வட்டத் தலைவர் பாபுஜான் முன்னிலை வகித்தார்.ஓய்வு பெற்ற வட்டாச்சி யர் ராஜசேகரன் ஆரோக்கி ய வாழ்வு குறித்து பேசி னார். ஆலங்குடி அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் மணிவண்ணன் பேசுகையில், நவீன உலகில் சுகாதாரம் கேள்விக் குறியாய் இருக்கிறது.முருங்கையும் முடக்கத்தானும் சாப்பிட்ட நம் முன்னோர்கள் போன்று இன்று மனித ஆரோக்கியம் இல்லை. எனவே துரித உணவுதான் இன்றைக்கு உடம்பிற்கு பல்வேறு நோய்களை உண்டாக்கி மனிதனை ஆரோக்கிய மற்றவனாக மாற்றுகிறது. இயற்கை உணவையும் மூலிகை மருந்துகளையும் உண்டாலே நோய்நொடியின்றி நீடித்து வாழலாம் என்று பேசினார். வம்பன் சிவகு மார், அப்பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.மருத்துவர்கள் கோவிந்தசாமி, சரண்யா ஆகியோர் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினர். சமூக ஆர்வலர்கள் கணபதி, பெர்ணான்டஸ்,அந்தோ ணிசாமி, சுப்பிரமணியன், தைலா, முரளி, அபினேஷ் உள்ளிட் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக ராஜேந்திரன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News