வாகவாசல் ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம்
- வை.முத்துராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- வாகவாசல் ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை வட்டாரம் ஆதனக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட வாகவாசல் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமினை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா துவக்கி வைத்து கர்ப்பிணி ப்பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்ட கங்களை வழங்கினார்.
புதுக்கோட்டை துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் ச.ராம்கணேஷ் வரவேற்புரை ஆற்றினார். வட்டார மருத்துவ அலுவலர் பொன்.சரவணன் திட்ட விளக்க உரை ஆற்றினார். மேலும் வாகவாசல் ஊராட்சி மன்றத் தலைவர் மஞ்சுளா முத்தையா தலைமை வகித்தார் மற்றும் ஒன்றிய பெருந்தலைவர் சின்னையா, ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ்,
ஊராட்சி மன்றத் துணை தலைவர் பாஸ்கர், மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவேல், உதவி தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.