உள்ளூர் செய்திகள் (District)

புதுக்கோட்டையில் - சிறப்பு குழந்தைகளை பராமரிப்போர் மேம்பாட்டு கூட்டம்

Published On 2023-11-26 06:38 GMT   |   Update On 2023-11-26 06:38 GMT
  • புதுக்கோட்டையில் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் சமூக மனநலம் மற்றும் பராமரிப்பாளர்களின் பிரச்சினையை புரிந்து கொள்வது குறித்த தன்னார்வர்களுக்கான பயிற்சி நடைப்பெற்றது.
  • மனநலம் பாதிக்கபட்டவர்களை பராமரிக்கும் நபர்களை கண்டறிந்து அவர்களின் மேம்பாட்டிற்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் சமூக மனநலம் மற்றும் பராமரிப்பாளர்களின் பிரச்சினையை புரிந்து கொள்வது குறித்த தன்னார்வர்களுக்கான பயிற்சி நடைப்பெற்றது. திருவரங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட 48 ஊராட்சி மற்றும 3 பேரூராட்சிகள் உள்ளிட்ட 51 பகுதிகளில் உள்ள மனநலம் பாதிக்கபட்டவர்களை பராமரிக்கும் நபர்களை கண்டறிந்து அவர்களின் மேம்பாட்டிற்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதற்கான தொடக்க விழாவில் கிராம பெண்கள் மேம்பாட்டு அமைப்பு இயக்குநர் தாஸ், நடேஷ், மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், பயிற்சியாளர்கள் திருவள்ளுர் சூசைராஜ், புதுக்கோட்டை பேராசிரியர் சலோமி சங்கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News