உள்ளூர் செய்திகள் (District)

முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

Published On 2023-05-05 06:26 GMT   |   Update On 2023-05-05 06:26 GMT
  • முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
  • வரும் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

புதுக்கோட்டை:

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று வழங்கப்பட்டு வருகிறது.நடப்பு ஆண்டிற்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும் . விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றி இருக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.இணையதளம் மூலம் வரும் 31-ந் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களுடைய சான்றிதழ்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அலுவலரிடம் சான்றிதழ் சரிபார்ப்பதற்காக ஒப்படைக்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலைபேசி எண் 7401703498 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News