உள்ளூர் செய்திகள்
- புதுக்கோட்டை வடகாட்டில் நடைபெற்றது
- ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு முத்துமாரியம்மன் கோயில் அப்பகுதியிலுள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றாக திகழ்கிறது. இக்கோயிலின் சித்திரை திருவிழா கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை காப்புக்கட்டுதலோடு தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான வைரத்தேரோட்டம் வான வேடிக்கையுடன் நடைபெற்றது. தேரோட்ட விழாவில் வடகாடு, கொத்தமங்கலம், மாங்காடு மற்றும் அணவயல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.