உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் படுகாயம்

Published On 2023-04-07 07:40 GMT   |   Update On 2023-04-07 07:40 GMT
  • மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் படுகாயம் அடைந்தார்
  • இந்த விபத்து குறித்து இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை

இலுப்பூர் அருகே உள்ள குறிச்சிப்பட்டியை சேர்ந்தவர் பொன்னையா (வயது 60). இவர் இலுப்பூர் தனியார் திருமண மண்டபம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இலுப்பூர் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக பொன்னையா மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News