உள்ளூர் செய்திகள் (District)

முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்

Published On 2023-04-04 08:22 GMT   |   Update On 2023-04-04 08:38 GMT
  • திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
  • விராலிமலை அருகே இருந்திரப்பட்டியில் நடைபெற்றது

விராலிமலை,

புதுக்கோட்டை மாவட் டம் இலுப்பூர் அருகே உள்ள இருந்திரப்பட்டியில் பிரசித்தி பெற்ற முத்து–மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த மாதம் 19-ந்தேதி பூச்சொரிதல் விழா நடை–பெற்றது. இதைத்தொ–டர்ந்து கடந்த 26-ந்தேதி பங்குனி தேரோட்டம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழா நாட்களில் தின–மும் முத்துமாரியம்மன் காலையிலும், மாலையிலும் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பால்கு–டம் ஊர்வலமும், தீச்சட்டி ஏந்திச்செல்லுதல், அலகு நேர்ச்சை, தொட்டில் கட்டு–தல், மாவிளக்கு ஏற்றுதல், பொங்கல் வைத்தல் என பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. இந்த தேரை முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தேங்காய் உடைத்து வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரி–யம்மன் தேரில் எழுந்தரு–ளினார். இதையடுத்து மாலை 5 மணிக்கு மேள, தாளம் முழங்க, வாண–வேடிக்கையுடன் திர–ளான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக அசைந் தாடி வந்தது.ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் கூடிநின்று தேங் காய், பூ, பழம் வைத்து முத்துமாரியம்மனுக்கு அர்ச்சனை செய்து வழி–பட்டனர். மாலை 7 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது.பின்னர் முத்துமாரியம் மனுக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் இலுப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழாவிற்கு வந்த பக் தர்களுக்கு முன்னாள் அமைச் சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் குடும்பத்தினர் சார்பில் சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்தும, அன்னதானமும் வழங்கப்பட்டது. திரு–விழாவை தொடர்ந்து நாளை (புதன்கிழமை) மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடு–களை விழா குழுவினரும் ஊர் பொதுமக்களும் செய் திருந்தனர்.

Tags:    

Similar News