உள்ளூர் செய்திகள்

நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

Published On 2023-01-30 07:45 GMT   |   Update On 2023-01-30 07:46 GMT
  • விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை ஏற்பு
  • கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து பயன் பெற அழைப்பு

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் செங்கமேடு ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையின் படி கறம்பக்குடி வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும் ஆத்மா கமிட்டி சேர்மனுமான வி.முத்துகிருஷ்ணன் திறந்து வைத்து பேசுகையில், இப்பகுதி விவசாயிகள் கோரிக்கையின் படி கலெக்டரிடம் அனுமதி பெற்று இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்மணிகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து பயன் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். மேலும் நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள் பொதுமக்கள் கலந்துகொண்டு அரசுக்கு நன்றி சொல்லி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Tags:    

Similar News