உள்ளூர் செய்திகள் (District)

மாணவ, மாணவிகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான பரிசு

Published On 2023-04-05 08:56 GMT   |   Update On 2023-04-05 08:56 GMT
  • குழந்திரான்பட்டு அரசு தொடக்க பள்ளி ஆண்டுவிழாவில் வழங்கப்பட்டது
  • பல்சுவை கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் குழந்திரான்பட்டு ஊராட்சியில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவியர்கள் யோகா, பரதநாட்டியம், நடன நிகழ்ச்சிகள் மற்றும் சமூக விழிப்புணர்வு நாடகங்கள் கட்டுரைப் போட்டி, கவிதை போட்டி ஆகியவை சிறப்பாக நடைபெற்றது. போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பன்னீர் தேவர் அறக்கட்டளை சார்பில் அறக்கட்டளையின் தலைவரும் பெரும் தொழில் அதிபருமான கரிகாலன் தேவர் சுமார் மூன்று லட்சம் மதிப்புள்ள பரிசு பொருட்களை வழங்கினார். பரிசு பொருட்களை வழங்கிய கரிகாலன் விழாவில் பேசும்போது, இந்தப் பகுதியின் கல்வி வளர்ச்சிக்கு பன்னீர் தேவர் அறக்கட்டளை என்றும் துணை நிற்கும். நன்றாக படித்து அதிக மதிப்பெண்களை பெறும் மாணவ மாணவியர்களுக்கு மேல் படிப்புக்கான செலவுகளை அறக்கட்டளை ஏற்றுக் கொள்ளும் பேசினார். இந்த அறிவிப்பினை கேட்டு பெற்றோர்கள் அனைவரும் கைத்தட்டி பாராட்டினர். நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திரதுரை, வட்டார கல்வி அலுவலர், ஓய்வு பெற்ற கல்வி அலுவலர் சிவ திருமேனிநாதன், பட்டிமன்ற நடுவரும் பழனி ஆண்டவர் கலை கல்லூரியின் பேராசிரியருமான முனைவர் தங்க ரவிசங்கர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கருப்பையா, ஊராட்சி மன்ற தலைவர் வீரப்பன் மற்றும் ஊர் பொதுமக்கள், பள்ளியின் இருபால்ஆசிரிய திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News