உள்ளூர் செய்திகள் (District)

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

Published On 2023-05-24 08:06 GMT   |   Update On 2023-05-24 08:06 GMT
  • ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்
  • போலீசுார் அவரிடமிருந்து சுமார் 600 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்

புதுக்கோட்டை :

புதுகோட்டை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் திருவப்பூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மொபட்டில் வந்த புதுகோட்டை வடக்கு மூன்றாம் வீதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 44) என்பவரை மறித்து விசாரித்தனர். இதில் ரேஷன் அரிசியை மூட்டைகளில் அவர் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, சுமார் 600 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் மொபட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News