உள்ளூர் செய்திகள் (District)

இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் மறியல்

Published On 2023-05-04 06:03 GMT   |   Update On 2023-05-04 06:03 GMT
  • இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்
  • முதல்வர் இறந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், புதுப்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லூரில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இங்கு மீமிசல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீ்ஸ்காரர் நவநீதகிருஷ்ணன் என்பவர் அங்கு பாதுகாப்பு பணிக்காக சென்றார். பாதுகாப்பு பணியின் போது காளை முட்டியதில் படுகாயமடைந்து பரிதாபமாக அவர் இறந்தார்.

இதையடுத்து உரிய பாதுகாப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தாமல் மஞ்சுவிரட்டு போட்டியை நடத்திய நிர்வாகத்தை கண்டித்தும், இறந்தவர் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், இறந்த போலீஸ்காரரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்து விரைந்து வந்த வந்த கோட்டாட்சியர் சொர்ணராஜ், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் பெற்றுத்தர ஆவணம் செய்யப்படும் என உறுதியளித்தார். இதனை தொடர்ந்து உறவினர்கள் உடலை பெற்றுக் கொண்டு கலைந்து சென்றனர்.

இதற்கிடையில் தமிழக முதல்வர் இறந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News