உள்ளூர் செய்திகள் (District)

ஆலங்குடி மருத்துவமனையில் பாம்புகள் தொல்லை

Published On 2022-09-05 08:44 GMT   |   Update On 2022-09-05 08:44 GMT
  • ஆலங்குடி மருத்துவமனையில் பாம்புகள் தொல்லை உள்ளது
  • செடி கொடிகளை அகற்ற வேண்டும்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 75 படுக்கைகளுடன் அனைத்து வசதிகளும் உள்ள இந்த மருத்துவ மனையில் பாம்புகள் நுழைந்து அவ்வப்போது நோயாளிகளை மிரட்டி வருவதாக மருத்துவமனைக்கு வரும் மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். எனவேமருத்துவமனை வளாகத்தில் உள்ள அதிகமான செடி கொடிகளை அகற்றி தூய்மையாக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைததுள்ள்ளனர்.

Tags:    

Similar News