உள்ளூர் செய்திகள் (District)

சாலை மறியல் போராட்டம்

Published On 2023-02-14 06:33 GMT   |   Update On 2023-02-14 06:33 GMT
பூச்செடிகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்

ஆலங்குடி,

ஆலங்குடி அருகே உள்ள அரண்மனைக்கொல்லை மல்லிகை, முல்லை பூ செடிகளை வெட்டி சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது.அரண்மனைக் கொல்லைய சேர்ந்தவர் சண்முகவடிவேல் (வயது 45). விவசாயியான இவரும், இவரது தம்பி செந்தில் வடிவேலும், அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் மல்லிகை, முல்லை பூ செடிகள் நட்டு பூ மகசூல் செய்து வந்தனர்.இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பாண்டியன் உள்பட சிலர் மல்லிகை, முல்லை பூ செடிகளை அரிவாள் கொண்டு வெட்டி சேதப்ப டுத்தியதாக கூறப்படுகிறது. சுமார் 500-க்கும் மேற்பட் பூச்செடிகள் வெட்டி சேதப்படுத்தப்பட்டுள்ளது.பூச்செடிகளை வெட்டி யவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கீரமங்கலம் காவல் நிலையத்தில்சண்மு கவடிவேல் புகார்கொடு த்துள்ளார். ஆனால் நடவடிக்கை எடுக்கப்ப டவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயி சண்முகவடிவேலும், அவரது உறவினர்களும், கீரமங்கலம் பஸ் நிலையம் அருகே திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அறந்தாங்கி டி.எஸ்.பி. தினேஷ்குமார், கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், வடகாடு இன்ஸ்பெக்டர் ஜெகதீஷ், கீரமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரவி, கிராம அலுவலர் தனலட்சுமி ஆகிேயார மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் பாதிக்கப்பட்ட இடத்திற்கு வந்து பார்வையிட்டு பின்னர் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்என்று அவர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.திடீர் மறியல் போரா ட்டத்தால், கீரமங்கலம் பஸ் நிலையம் அருகே சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News