உள்ளூர் செய்திகள் (District)
சுப்பிரமணியசாமி கோவில் கும்பாபிஷேகம்
- சுப்பிரமணியசாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை புதுகை சாலையில் செட்டி ஊரணி குளக்கரையில் தென்புறம் அமைந்துள்ள வலம்புரி விநாயகர் மற்றும் வள்ளி தேவசேன சமேத சுப்பிரமணியசாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோவில் அருகில் யாகசாலை அமைத்து மூன்று கால பூஜைகள் நடைபெற்றது.தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று கோவில் கோபுரத்தின் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர் .பக்தர்களுக்கு விழா குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினரும் ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர்.