உள்ளூர் செய்திகள் (District)

மரத்தில் இருந்து தவறி விழுந்த டிரைவர் பலி

Published On 2023-05-09 04:59 GMT   |   Update On 2023-05-09 04:59 GMT
  • மரத்தில் இருந்து தவறி விழுந்த டிரைவர் பலியானார்
  • நுங்கு வெட்டுவதற்காக ஏறியபோது விபரீதம்

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை திருமயம் அருகே உள்ள பறையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 52), டிரைவர். இவர் திருமயம் தாமரைக்கண்மாய் கரையில் உள்ள பனைமரத்தில் நுங்கு வெட்டுவதற்காக மரத்தில் ஏறி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக 40 அடி உயரத்தில் இருந்து கீழே தவறி விழுந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருமயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News