உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்த வாலிபர் உயிரிழப்பு

Published On 2022-07-25 09:02 GMT   |   Update On 2022-07-25 09:02 GMT
  • விஷம் குடித்த வாலிபர் உயிரிழந்தார்
  • குடும்ப தகராறில் நடந்த விபரீதம்

புதுக்கோட்டை:

ஆலங்குடி அருகே உள்ள வடகாடு வடக்குபட்டியைச்சேர்ந்த ராஜேந்திரன் மகன் இந்திராஜி (வயது 27). சம்பவத்தன்று குடும்பத்தில் தாயாருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவிரக்தியில் வயலுக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையி ல் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இந்திரஜி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் வடகாடு போலீசார் வழக் குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News