உள்ளூர் செய்திகள்

கடையடைப்பு போஸ்டரால் ஆலங்குடியில் பரபரப்பு

Published On 2023-01-22 07:01 GMT   |   Update On 2023-01-22 07:01 GMT
  • கடையடைப்பு போஸ்டரால் ஆலங்குடியில் பரபரப்பு ஏற்பட்டது
  • கடையடைப்பு நடத்த போவதாக அப்பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது.

ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கல்லாலங்குடி ஊராட்சியில் சாலைகள் சீரமைப்பு பணி நடைபெற்று உள்ளது. ஆனால் இந்த பணி உரிய வகையில் முழுமையாக நடைபெற வில்லை. எனவே ஊராட்சிக்கு உட்பட்ட குளத்தில் இருந்து மண் எடுத்த சாலைகளை முழுமையாக சீர் செய்ய வேண்டும். பணம் பறிக்கும் நோக்கத்தில், தனி நபர் ஒருவர் அதிகாரிகளை தடுத்து மிரட்டி வருவதால், பணிகள் நடைபெறாமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

எனவே இதனை கண்டித்தும், சாலை பணிகளை முழுமையாக முடிக்க கோரியும் கண்டன கடையடைப்பு நடத்த போவதாக அப்பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. 24-ம் தேதி கடையடைப்பு நடைபெறுவதாகவும், இதற்கு பிறகும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் 26-ம் தேதி குடியரசு தினத்தன்று நடைபெற உள்ள கிராம சபா கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணிக்க உள்ளதாகவும் அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆலங்குடி கல்லாலங்குடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.


Tags:    

Similar News