உள்ளூர் செய்திகள்

தரம் உயர்த்தப்பட்ட மின்மாற்றி அர்ப்பணிப்பு

Published On 2022-08-17 08:39 GMT   |   Update On 2022-08-17 08:39 GMT
  • தரம் உயர்த்தப்பட்ட மின்மாற்றி அர்ப்பணிக்கப்பட்டது
  • முதல்வர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்

புதுக்கோட்டை:

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில், எரிசக்திதுறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் ரூ.161 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் புதிய துணை மின் நிலையங்களை திறந்து வைத்தார். அதன்படி புதுக்கோட்ைட மாவட்டம் கறம்பக்குடி துணை மின்நிலையத்தில் 10 மெகா வோல்ட் ஆம்பியர்ஸ் பவர் மின்மாற்றியை 16 மெகா வோல்ட் ஆம்பியர்ஸ்சாக தரம் உயர்த்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் காணொலி காட்சி வழியாக அர்ப்பணித்தார்.

அப்போது கறம்பக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திரதுரை, ஆலங்குடி செயற்பொறி யாளர் நடராஜன், உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம், உதவி மின் பொறியாளர்கள் முத்து, அப்துல் வஹாப், சி.பி.ஐ.எம். ஒன்றிய செயலாளர் வீரமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அன்பழகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News