உள்ளூர் செய்திகள் (District)
- ஆலங்குடியில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது
- ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடைபெற்றது
புதுக்கோட்டை:
தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் 31-வது சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதா நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிகள், ஊராட்சி, நகராட்சி அலுவலகங்கள், பேருந்து, ரெயில் நிலையங்கள், பூங்காக்கள் என மக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் முகாம்கள் நடத்தப்பட்டன. அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் புனித அற்புத மாதா நடுநிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய நடநிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இதில் ஆலங்குடி சுகாதார ஆய்வாளர் ஜேம்ஸ், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்