உள்ளூர் செய்திகள் (District)
- கோலப்போட்டியில் கலந்து கொண்ட பெண்களுக்கு பரிசு
- முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்றது
புதுக்கோட்டை
வடக்கு மாவட்ட திமுக மகளிரனி சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற கோலப் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கேகே செல்ல பாண்டியன் பரிசு வழங்கினார். அருகில் மேற்கு ஒன்றிய செயலாளர் இளங்குமரன், விராலிமலை ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ரவி,வடுகபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி குமார், ஒன்றிய இளைஞரனி சிவக்குமார், விராலிமலை தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சுகி என்கிற சுகுமாரன், ஊராட்சி மன்ற உறுப்பினர் வசந்தி பிரபு, அரசு ஒப்பந்தக்காரர் சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.