உள்ளூர் செய்திகள்

போலீஸ்காரர் மாரடைப்பால் மரணம்

Published On 2023-10-01 09:30 GMT   |   Update On 2023-10-01 09:30 GMT
  • கந்தர்வகோட்டை அருகேபோலீஸ்காரர் மாரடைப்பால் மரணம்
  • விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தபோது பரிதாபம்

கந்தர்வகோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டம் பழைய கந்தர்வகோட்டையை சேர்ந்தவர் அறிவுக்கரசு (வயது 42). இவர் மதுரை பட்டாலியன் போலீசாக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று விடுமுறைக்கு பழைய கந்தர்வகோட்டையையில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். அப்போது அறிவுக்கரசுக்கு காலையில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் கந்தர்வகோட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே போலீஸ் அறிவுக்கரசு இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக கந்தர்வகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாரடைப்பால் மரணம் அடைந்த காவலர் அறிவுக்கரசுக்கு ஜான்சிராணி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.   

Tags:    

Similar News