உள்ளூர் செய்திகள்

கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்: இதுவரை 8 பேரிடம் உதவி கலெக்டர் விசாரணை

Published On 2023-03-31 03:05 GMT   |   Update On 2023-03-31 03:05 GMT
  • அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய பல்வீர்சிங் என்பவர், பற்களை கொடூரமாக பிடுங்கியதாக புகார் எழுந்தது.
  • சூர்யா தான் கீழே விழுந்ததில் பல் உடைந்து விட்டது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் அம்பை காவல் உட்கோட்ட பகுதியில் உள்ள போலீஸ் நிலைய எல்லை பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை, அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய பல்வீர்சிங் என்பவர், பற்களை கொடூரமாக பிடுங்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, இந்த புகார் தொடர்பான விசாரணை அதிகாரியாக சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

உதவி கலெக்டர் முன் ஏற்கனவே லட்சுமிசங்கர், சூர்யா, சுபாஷ் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். மேலும் கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசாரிடமும் உதவி கலெக்டர் விசாரணை நடத்தினார். இந்தநிலையில் நேற்று வெங்கடேஷ் என்ற வாலிபர் சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் முன்பு ஆஜரானார். அவரிடம் உதவி கலெக்டர் விசாரித்து விளக்கம் பெற்றார்.

இதற்கிடையே சூர்யா, தான் கீழே விழுந்ததில் பல் உடைந்து விட்டது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News