உள்ளூர் செய்திகள் (District)

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்வு-முதல்வருக்கு நன்றி

Published On 2022-12-06 09:37 GMT   |   Update On 2022-12-06 09:37 GMT
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையையும் தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்
  • மேலும் ஒரு சலுகையாக மாற்றுத் திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மாதாந்திர உதவித்தொகை ரூ.ஆயிரத்திலிருந்து ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கியும் உத்தரவிட்டுள்ளார்

புதுக்கோட்டை:

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவரும், நல வாரிய உறுப்பினருமான ஆலங்குடி அருகே உள்ள கீழாத்தூர் ரெ.தங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றதோடு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையையும் தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார்.

மாற்றுத்திறனாளிகளின் நீண்டநாள் கனவான மெரினா கடற்கரையில் சிறப்பு பாதை அமைத்து கடல் நீரில் தங்களது பாதங்களை பதித்து மகிழ்ச்சியை அலங்கரிக்க செய்தாா்.

இதனை தொடர்ந்து இலவச வீட்டுமனை பட்டா, மாநக போக்குவரத்து பேருந்துகளில் துணையுடன் சென்றுவர இலவச பயணச்சலுகை, 5 சதவீத வீடு வழங்க அரசாணை பிறப்பித்தல், சாலை ஓர ங்களில் வியபாரம் செய்ய அனுமதி, திருமண உதவித்தொகையை ரொக்கமாக வழங்க அரசாணை, அரசு வளாகங்களில் ஆவின் பாலகம் அமைக்க வாடகை முன்தொகை செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்தல்,

இந்து சமய அறநிலைய கோவில்களில் சீர் வரிசையுடன், இலவச திருமணம் நடத்திட அரசாணை பிறப்பித்தல், சிறப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு மாத மதிப்பூதியம் ரூ.14 ஆயிரத்திலிருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்கி அர சாணை வெளியிடல் போன்ற வரலாற்று திட்டங்களோடும், மேலும் ஒரு சலுகையாக மாற்றுத் திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மாதாந்திர உதவித்தொகை ரூ.ஆயிரத்திலிருந்து ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கியும் உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றச் சங்கம் சார்பாக நன்றி தெரிவித்து மகிழ்கின்றேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News