உள்ளூர் செய்திகள்

அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம்

Published On 2023-04-21 08:40 GMT   |   Update On 2023-04-21 08:40 GMT
  • ராமநாதபுரம் அருகே அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
  • பணிக்ெகாடை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

ராமநாதபுரம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை தி.மு.க. அரசு நிைறவேற்ற வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு 9 ஆயிரமும், அங்கன்வாடி உதவியாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

பணிக்ெகாடை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடந்தது. இதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News