உள்ளூர் செய்திகள் (District)

முத்துப்பேட்டை கவுசானல் கல்லூரி சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Published On 2022-08-17 06:43 GMT   |   Update On 2022-08-17 06:43 GMT
  • ராமநாதபுரத்தில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
  • கல்லூரி செயலர் மரிய சூசை அடைக்கலம் தலைமையில் நடந்தது.

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை கவுசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம்,இளையோர் செஞ்சிலுவை சங்கம்,செஞ்சுருள் சங்கம் இனணந்து புகையிலை மற்றும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி கல்லூரி செயலர் மரிய சூசை அடைக்கலம் தலைமையில் நடந்தது.

முதல்வர் ஹேமலதா முன்னிலையில் பேரணியை பெரியபட்டிணம் ஊராட்சி தலைவர் அக்பர் ஜான் பீவி, திருப்புல்லாணி சப்-இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பெரியபட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கோஷங்கள் முழங்கியபடி சென்றனர்.

வழி நெடுகிலும் மாணவ, மாணவிகள் போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி வந்தனர்.

பேரணியில் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கி ணைப்பாளர் முருகேசன், செஞ்சுருள் சங்க ஒருங்கி ணைப்பாளர் கவுதமராஜ், ஆங்கில துறை தலைவர் சீனி அப்துல் சமது மற்றும் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News