உள்ளூர் செய்திகள் (District)

பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம்

Published On 2022-06-10 09:54 GMT   |   Update On 2022-06-10 09:54 GMT
  • மதுரையில் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது.
  • முகாமில் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ராமநாதபுரம்

தமிழக அரசின் ஆணைக்கிணங்க மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது விநியோ கத்திட்ட குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக ஜூன் மாதத்தின் கீழ்க்காணும் கிராமங்களில் நடத்தப்பட உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் வட்டம் - கழுகூரணி, ராமேசுவரம் வட்டம்-பாம்பன், திருவாடானை வட்டம் -ஊரணிகோட்டை, பரமக்குடி வட்டம்- தெளிச்சாத்தாநல்லூர், முதுகுளத்தூர் வட்டம் -காக்கூர், கடலாடி வட்டம்- எம்.சவேரியார் பட்டிணம், கமுதி வட்டம் - பேரையூர்.

கீழக்கரை வட்டம் -காஞ்சிரங்குடி, ஆர்.எஸ்.மங்கலம் வட்டம்-புல்லமடை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தல், குடும்ப அட்டைகளில் பிழைத்திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை நகல், குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் ரேஷன் கடைகளில் பொருள்பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகாரச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் நாளை (11-ந்தேதி) காலை 10 மணியளவில் நடைபெற உள்ள குறைதீர்முகாமில் மனுக்களை அளித்து இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Tags:    

Similar News