உள்ளூர் செய்திகள்
- தொண்டி அருகே கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- 2-ம் நிகழ்ச்சியாக சந்தாதாரர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளையில் 99-ம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் நடந்தது. மஸ்தான் சாகிபு தர்காவில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் ஊர்வலமாக கொடி கொண்டு செல்லப்பட்டு ஏற்றப்பட்டது.
இதில் திரளாேனார் கலந்து கொண்டனர். 2-ம் நிகழ்ச்சியாக சந்தாதாரர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. குர்ஆன் ஓதி மகான் பெயரால் தப்ரூக் என்னும் உணவு வழங்கப்படும். மகான் பெயரால் மவுலிது ஓதி கந்தூரி விழா நிறைவுபெறும்.