உள்ளூர் செய்திகள்
- மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தனர்.
- பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் டூவீலருக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஐந்துமுனை பகுதியைச் சேர்ந்தவர் சேக் முகமது உசேன் (25). வாடகை கார் டிரைவர்.
நேற்று இரவு இவர் வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார். காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து சேதமடைந்து கிடந்தது. இதுகுறித்து பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் டூவீலருக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.