உள்ளூர் செய்திகள்

நீர், மோர் பந்தலை மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி திறந்து வைத்த காட்சி. அருகில் ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி.மருதுபாண்டியன், எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் உள்ளனர். 

கோடை கால நீர்-மோர் பந்தல்

Published On 2023-04-11 09:00 GMT   |   Update On 2023-04-11 09:00 GMT
  • கோடை கால நீர்-மோர் பந்தலை மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி திறந்து வைத்தார்.
  • தகவல் தொழில்நுட்ப பிரிவு செய லாளர் சரவணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பட்டணம்காத்தான் முதல்நிலை ஊராட்சி பாரதிநகர் பஸ் நிறுத்தம் அருகில் கோடைகால நீர்-மோர் பந்தல் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.

மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி.மருது பாண்டியன் ஏற்பாட்டில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை தாங்கி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி. மருதுபாண்டியன், எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ராஜேந்திரன், ராமநாதபுரம் மாவட்ட அவை தலைவர் சாமிநாதன், ஒன்றிய செயலாளர் அசோக்குமார், நகர செயலாளர் பால்பாண்டியன், மாவட்ட பேரவை செயலா ளர் சேது பாலசிங்கம், மாவட்ட இணைச் செயலாளர் கவிதா சசிகுமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெய்லானி சீனிகட்டி, மாவட்ட மீனவர் கூட்டுறவு சம்மேளன தலைவர் வேலுச்சாமி, மாவட்ட விவசாய அணி செயலாளர் ராதாகிருஷ் ணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செய லாளர் சரவணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News