உள்ளூர் செய்திகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து 10 ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும்

Published On 2023-08-13 08:56 GMT   |   Update On 2023-08-13 08:56 GMT
  • மாவட்ட செயலாளர் சு.ரவி.எம்.எல்.ஏ. பேச்சு
  • வருகிற 20-ந்தேதி மாநாடு நடக்கிறது

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டையில் அ.தி.மு.க வின் நகர, ஒன்றிய, பேரூர் செயலாள ர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் நந்தகோபால் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏக்கள் சம்பத், சீனிவாசன் ஆகியோர் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கே.பி.சந்தோஷம் வரவேற்றார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

வருகிற 20ம் தேதி மதுரையில் நடைபெறும் பொன்விழா எழுச்சி மாநா ட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு 2ஆயிரத்து500 பேர் என மொத்தம் 10ஆயிரம் பேர் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கி பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் எஸ்.எம். சுகுமார் உள்பட மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News