உள்ளூர் செய்திகள்

நலத்திட்ட உதவிகளை அமைச்சர் காந்தி வழங்கிய காட்சி. அருகில் ஜெகத்ரட்சகன் எம்.பி. உள்பட பலர் உள்ளனர்.

187 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.21.50 லட்சம் நல திட்ட உதவி

Published On 2022-10-02 09:06 GMT   |   Update On 2022-10-02 09:06 GMT
  • அமைச்சர் காந்தி வழங்கினார்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

அரக்கோணம்:

அரக்கோணம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.21.5 மதிப்பீட்டில் 187 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு அதிநவீன மின்சாதனம் பொருந்திய மூன்று சக்கர வண்டி, செயற்கை கை மற்றும் கால், தேசிய அட்டை உள்ளிட்ட பல்வேறு நல திட்ட உதவிகளை கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஜெகத்ரட்சகன் எம்.பி., ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட அலுவலர் சரவணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி, ஒன்றிய குழு தலைவர் நிர்மலா சவுந்தர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அம்பிகா பாபு, மாவட்ட அலுவலர் மணிமேகலை, நகர மன்ற தலைவர் லட்சுமி, நகராட்சி ஆணையாளர் லதா, தாசில்தார் (பொ) சுமதி, ஊராட்சி ஒன்றிய அலுவலர் வெங்கடேசன், நகர் செயலாளர் வி.எல். ஜோதி, நகர மன்ற உறுப்பினர்கள் குமார், செந்தில்குமார், சாமுண்டீஸ்வரி, கே.எம்.பி.பாபு, சங்கீதா, சி.என் அன்பு, வடிவேல், கங்காதரன், நந்தாதேவி, துரை சீனிவாசன், மல்லிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News