உள்ளூர் செய்திகள் (District)

பள்ளத்தில் சிக்கிய சுற்றுலா பஸ்

Published On 2023-11-25 07:01 GMT   |   Update On 2023-11-25 07:01 GMT
  • அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
  • அப்பகுதி மக்கள் மீட்டனர்

அரக்கோணம்:

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் தொடர் மழை பெய்து வருகிறது.

இதனால் சாலை ஓரங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி உள்ளது. இந்நிலையில் அரக்கோணம் காஞ்சிபுரம் சாலையில் ஐ.என்.எஸ் ராஜாளி கடற்படை விமான தளம் எதிரே காஞ்சீபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த சுற்றுலா பஸ் திடீரென பள்ளத்தில் இறங்கியது. உடனடியாக டிரைவர் சுதாரித்துக் கொண்டு வாகனத்தை நிறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து உள்ளே இருந்த பயணிகளை அப்பகுதி மக்கள் பத்திரமாக மீட்டனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதையடுத்து சாய்ந்து நின்ற சுற்றுலா பஸ்சை கிரேன் வரவழைக்கப்பட்டு பள்ளத்தில் இருந்து மீட்டனர்.

மேலும் இது குறித்து விசாரித்த போது சுற்றுலா பஸ்சில் பயணம் செய்தவர்கள் சிவகாசியை சேர்ந்தவர் என்பதும் திருப்பதிக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு அரக்கோணம் வழியாக சென்னைக்கு செல்லும் போது இந்த சம்பவம் நடந்தது தெரியவந்தது.

இதனால் அரக்கோணம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News