உள்ளூர் செய்திகள்

ஆற்காடு பாலாற்றில் உள்ள உறைகிணறு குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறும் காட்சி.

பாலாற்றில் 2-வது முறையாக உடைந்த உறை கிணறு குழாய்

Published On 2023-07-14 10:02 GMT   |   Update On 2023-07-14 10:02 GMT
  • தண்ணீர் வீணாவதால் ஆரணி பகுதியில் சப்ளை பாதிப்பு
  • பொதுமக்கள் கடும் அவதி

ஆற்காடு:

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பாலாற்றில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் அதிக அளவு குடிநீர் உறிஞ்சம் கிணறுகள் கட்டப்பட்டுள்ளது.

செய்யாறு சாலையில் உள்ள பாலாற்றில் ஆரணி நகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், குடிநீர் உறை கிணறு 2016-2017-ம் ஆண்டு கட்டப்பட்டது.

இந்த கிணற்றில் இருந்து தினமும் ஆரணி நகராட்சி மற்றும் கிராம பகுதிகளுக்கு குழாய் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

இந்த உறை கிணற்றிலிருந்து தண்ணீர் சப்ளை செய்யப்படும்

குழாயில் மீண்டும் 2-வது முறையாக உடைப்பு ஏற்பட்டுள்ளது. உடைந்த குழாய் வழியாக தினமும் அதிக அளவு தண்ணீர் வெளியேறி வீணாகுகிறது.

இதனால் ஆரணி பகுதியில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கடந்த 26 ஆம் தேதி குறிஞ்சிக் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக்கியது. இதனால் அதனை சரி செய்தனர். இதேபோல் மீண்டும் உறிஞ்சி குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.பொதுமக்களின் நலன் தகுதி உடைந்த குழாயை மீண்டும் இது போல் நடைபெறாமல் இருக்க முறையாக சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News